வக்ப் நடைமுறைகளை பேணி நிர்வாகத்தெரிவு நடத்துமாறும் கணக்கறிக்கைகளை உடன் சமர்ப்பிக்குமாறும் கோரி முஸ்லிம் திணைக்களம் பள்ளிவாசல்களுக்கு சுற்றறிக்கை

Date:

பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான நம்­பிக்­கை­யா­ளர்­களை தெரிவு செய்தல் மற்றும் கணக்­க­றிக்­கை­களை சமர்ப்­பித்தல் தொடர்பில் அனைத்து பள்­ளி­வா­சல்­களின் நம்­பிக்­கை­யா­ளர்கள் மற்றும் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்­க­ளுக்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் சுற்றறிக்கையொன்றை அனுப்பி வைத்துள்ளது.

இந்த விடயம் தொடர்­பாக அனைத்து பள்­ளி­வா­சல்­களின் நம்­பிக்­கை­யா­ளர்­களின் பதவிக் காலம் முடி­வ­டைந்­த­வர்­களும் குறிப்­பாக விஷேட நம்­பிக்­கை­யா­ளர்­களின் பதவிக் காலம் முடி­வ­டைந்­த­வர்­களும் மிக விரை­வாக புதிய நிரு­வாகத் தெரிவை தெரிவு செய்­வ­தற்­கான ஆயத்­தங்­களை மேற்­கொள்­வ­துடன் வக்ப் சட்ட நடை­மு­றை­களைப் பேணியும் பள்­ளி­வா­சல்­களின் யாப்பைப் பேணியும் செய்­யு­மாறு திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய நிரு­வாகத் தெரிவை செய்­வ­தற்கு தயா­ராகும் பள்­ளி­வாசல் நம்­பிக்­கை­யா­ளர்கள் மற்றும் நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்கள் அப்­பி­ர­தேச கள உத்­தி­யோ­கத்­தர்­க­ளுடன் தொடர்பு கொள்­ளு­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளனர்.

மேலும் வரு­டாந்த கணக்­க­றிக்­கை­களை சமர்ப்­பிக்­காத பள்­ளி­வா­சல்கள், சமர்ப்­பிக்­காத வரு­டங்கள் அனைத்­திற்கும் தனித்­த­னி­யாக திணைக்­கள இணையத்தளத்தில் (Web: w.w.w.muslimaffairs.gov.lk) இணைக்கப்பட்டுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து திணைக்களத்திற்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...