அரகலயை அடக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விதித்த அவசரகாலச் சட்டம் மனித உரிமை மீறலாகும்: நீதிமன்ற தீர்ப்பு

Date:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில்  அரகல போராட்டத்தை அடக்குவதற்கு விதிக்கப்பட்ட அவசரகால  தடைச் சட்டம் அடிப்படை மனித உரிமைகளை  மீறுவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 2 ஆவது விதிமுறையின் கீழ் பிரகடனப்படுத்திய அவசரகால சட்ட விதிமுறைகள் தன்னிச்சையானதும் அதிகாரமற்றதுமான செயற்பாடென மூவரடங்கிய நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் பெரும்பான்மையான நீதியரசர்கள் தீர்மானித்துள்ளனர்.

தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ, அர்ஜுன ஒபேசேகர மற்றும் யசந்த கோடகொட ஆகிய நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கினர்.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த சம்பவத்தினால் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக  உயர் நீதிமன்றம்  இன்று தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொள்கை மாற்றுகளுக்கான மையம், முன்னாள் மனித உரிமை ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் மற்றும் லிபரல் இளைஞர் இயக்கம் ஆகியவை இந்த அடிப்படை உரிமைகள் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

Popular

More like this
Related

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...

செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை...

இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியது ஜப்பான் அரசு!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு...

முஜாஹிதீன்களின் தலைவரும் உறுதிப்பாட்டின் சின்னமுமான உமர் முக்தாரின் தியாக நினைவு நாள்!

16.09.1931- 16.09.2025 முஜாஹிதீன்களின் தலைவராகவும் உறுதிப்பாட்டின் சின்னமாகவும் விளங்கிய உமர் முக்தார் 1862...