அஸ்வெசும கொடுப்பனவு; மேன்முறையீடு செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு!

Date:

அஸ்வெசும கொடுப்பனவுக்காக மேன்முறையீடு செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.

இந்நிலையில் அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக பயனாளர்களிடம் இருந்து சுமார் முப்பதாயிரம் மேன்முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்றைய தினத்திற்கு பின்னர் குறித்த மேன்முறையீடுகள் மீளாய்வு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாகங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மேன்முறையீட்டு குழவினரால் இந்த பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மீளாய்வு நடவடிக்கைகளின் பின்னர் அனைத்து பிரதேச செயலாகங்களின் ஊடாக மேன்முறையீடுகள் நலன்புரி நன்மைகள் சபைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டு அஸ்வெசும கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...

செப். 25 – ஒக். 01 வரை சிறுவர் தின தேசிய வாரம் பிரகடனம்!

சிறுவர் தினத்தை முன்னிட்டு செப். 25 – ஒக். 01 வரை...

இலங்கைக்கு 963 மில்லியன் யென் மானிய உதவியை வழங்கியது ஜப்பான் அரசு!

இலங்கையின் பால் உற்பத்தித் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், கடற்படையின் அதிகாரப்பூர்வ பாதுகாப்பு...

முஜாஹிதீன்களின் தலைவரும் உறுதிப்பாட்டின் சின்னமுமான உமர் முக்தாரின் தியாக நினைவு நாள்!

16.09.1931- 16.09.2025 முஜாஹிதீன்களின் தலைவராகவும் உறுதிப்பாட்டின் சின்னமாகவும் விளங்கிய உமர் முக்தார் 1862...