மலேசியாவில் இடம்பெற்ற மன எண்கணிதப் போட்டியில் சாதனை படைத்த திஹாரி மாணவன்!

Date:

திஹாரி சர்வதேச பாடசாலையை சேர்ந்த மாணவன் அப்துல்லா ஷியாம், மலேசியாவில் நடைபெற்ற Genting International Abacus and Mental Arithmetic (மன எண்கணித) போட்டியில் சிறப்பான வெற்றியை
பெற்றுள்ளார்.

திஹாரியின் ICAM ABACUS INSTITUTE (BCT College, Minhath Mawatha) கிளையின் பிரதிநிதியாக, பயிற்சியாளர் ஸஹ்லா ஸும்ரி அவர்களின் வழிகாட்டுதலில் இந்தப்போட்டியில் பங்கேற்றார்.

கடந்த ஜூன் 28ஆம் திகதி நடைபெற்ற இந்த போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த 3,500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அதில் preliminary தேர்வில் முதலிடமும், Elite தேர்வில் இரண்டாம் இடமும் பெற்ற அப்துல்லா ஷியாம், திஹாரி மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மிகக் குறுகிய காலத்திலேயே அவருடைய பெரும் சாதனையை நியூஸ் நவ் சார்பாக வாழ்த்துக்கள்!

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...