இலங்கை– துருக்கி இடையே பொருளாதாரம், முதலீடு, கல்வி உள்ளிட்ட பல துறைகளை விரிவுபடுத்த நடவடிக்கை!

Date:

இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டுக் குழுவின் (JCETC) மூன்றாவது அமர்வு இன்று (24) கொழும்பில் ஆரம்பமானது.

இதற்கு வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் துருக்கி தேசிய கல்வி அமைச்சர் யூசுப் டெக்கின் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இலங்கைக்கும் துருக்கியக் குடியரசுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மூலோபாய அணுகுமுறைகளுக்கானது.

அமர்வில், புதிய வாய்ப்புகளை ஆராயும் நோக்கத்துடன், இரு நாடுகளைச் சேர்ந்த சிரேஷ்ட அரச அதிகாரிகள், முன்னணி வணிகத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நமல் ராஜபக்ஷ வாழ்த்து!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றியை பதிவு செய்தமைக்காக நடிகரும்,...