சவூதி அரேபியாவில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை பிரிக்கும் அறுவை சிகிச்சை ஆரம்பம்!

Date:

சவூதி அரேபியாவின் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களான யாரா மற்றும் லாராவைப் பிரிக்கும் பெரும் அறுவைச் சிகிச்சை இன்று ரியாத்திலுள்ள மன்னர் அப்துல்லா சிறப்பு குழந்தைகள் மருத்துவமனையில் தொடங்கியுள்ளது.

இந்த அறுவைச் சிகிச்சை, மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த அறுவைச் சிகிச்சை உலக அளவில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ள ஒரு சிக்கலான மருத்துவ நடவடிக்கையாகும்.

மொத்தம் ஒன்பது நிலைகளைக் கொண்ட இந்த அறுவைச் சிகிச்சை சுமார் 15 மணி நேரம் வரை நீடிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அபூர்வமான மற்றும் நுணுக்கமான மருத்துவ செயல்பாடுகளில் ஒன்றாக கருதப்படும் இந்த அறுவை சிகிச்சை, சிறுவர் மருத்துவ நிபுணர்களின் குழுவால் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...