நிலந்த ஜயவர்தனவை, பொலிஸ் சேவையிலிருந்து நீக்க தீர்மானம்!

Date:

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்னதாக கிடைத்த புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காக, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய காவல்துறை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம், அவருக்கு எதிராக ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையில், நிலந்த ஜயவர்தன குற்றவாளி என கண்டறியப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவரான லலித் ஏகநாயக்க தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், அவரை காவல்துறை சேவையிலிருந்து நீக்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

நிலந்த ஜயவர்தன, ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்ற வேளையில் அரச புலனாய்வு சேவையின் பிரதானியாக பணியாற்றி இருந்தார்.

புலனாய்வு தகவல் கிடைத்திருந்த போதும், அதனை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்காமை காரணமாக, அவருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் வழக்கிலும் முன்னதாக அவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...