பேருந்தின் மிதி பலகையில் இருந்து விழுந்த மாணவன்: சாரதி, நடத்துனரின் கவனக்குறைவே காரணம்!

Date:

பயணித்துக் கொண்டிருந்த பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனர் கவனக்குறைவாக வாகனத்தை இயக்கியதுதான் இந்த விபத்துக்குக் காரணம் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விபத்து நேற்று (03) தினம் இடம்பெற்றது. சம்பவத்திற்குப் பின்னர், வடமேற்கு மாகாண போக்குவரத்து ஆணைக்குழு, சம்பந்தப்பட்ட சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணையின் முடிவுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலமாக இது தெரியவந்துள்ளது.

மேலும், மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து போக்குவரத்து ஊழியர்களும் தங்களது கடமைகளை கவனத்துடனும் பொறுப்புடனும் மேற்கொள்ள வேண்டும் என்று ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...