பேருந்தின் மிதி பலகையில் இருந்து விழுந்த மாணவன்: சாரதி, நடத்துனரின் கவனக்குறைவே காரணம்!

Date:

பயணித்துக் கொண்டிருந்த பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனர் கவனக்குறைவாக வாகனத்தை இயக்கியதுதான் இந்த விபத்துக்குக் காரணம் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விபத்து நேற்று (03) தினம் இடம்பெற்றது. சம்பவத்திற்குப் பின்னர், வடமேற்கு மாகாண போக்குவரத்து ஆணைக்குழு, சம்பந்தப்பட்ட சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணையின் முடிவுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலமாக இது தெரியவந்துள்ளது.

மேலும், மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து போக்குவரத்து ஊழியர்களும் தங்களது கடமைகளை கவனத்துடனும் பொறுப்புடனும் மேற்கொள்ள வேண்டும் என்று ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...