பேருந்தின் மிதி பலகையில் இருந்து விழுந்த மாணவன்: சாரதி, நடத்துனரின் கவனக்குறைவே காரணம்!

Date:

பயணித்துக் கொண்டிருந்த பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனர் கவனக்குறைவாக வாகனத்தை இயக்கியதுதான் இந்த விபத்துக்குக் காரணம் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விபத்து நேற்று (03) தினம் இடம்பெற்றது. சம்பவத்திற்குப் பின்னர், வடமேற்கு மாகாண போக்குவரத்து ஆணைக்குழு, சம்பந்தப்பட்ட சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணையின் முடிவுகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின் மூலமாக இது தெரியவந்துள்ளது.

மேலும், மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து போக்குவரத்து ஊழியர்களும் தங்களது கடமைகளை கவனத்துடனும் பொறுப்புடனும் மேற்கொள்ள வேண்டும் என்று ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...