பொரளை விபத்து; சாரதி கஞ்சா பாவித்தமை அம்பலம்.

Date:

பொரளை பொது மயான பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற விபத்தில் கைது செய்யப்பட்ட கிரேன் வாகன சாரதி கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் அடிப்படையிலே குறித்த சாரதி போதைப்பொருள் பாவித்திருந்தமை உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்வத்தில் 6 மோட்டார் சைக்கிள்கள், 3 கார்களுடன் குறித்த பார வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயது நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொரளை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

Popular

More like this
Related

தலைமுறை அடிப்படையில் புகையிலைக்கு தடை விதித்த மாலைதீவு

மாலைதீவு நாட்டில் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி...

இஸ்ரேலில் இருந்து 45 பலஸ்தீனர்கள் உடல்கள் ஒப்படைப்பு!

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக் கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல்...

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...