44 வீத பெரும்பான்மை ஆசனம் வென்ற NPP தலைமை வேட்பாளர் 1 வாக்கினால் வெலிகம பிரதேச சபையில் தோல்வி: ஆட்சி SJB வசம்

Date:

45 ஆசனங்களைக் கொண்ட வெலிகம பிரதேச சபையின் 22 ஆசனங்களைப் பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க முடியாமல் போயுள்ளது.

வெலிகம பிரதேச சபைக்கான தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி 22 ஆசனங்களை வென்றிருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தி 9, ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன 6, ஐக்கிய தேசியக் கட்சி 2, சர்வஜன அதிகாரம் 2, மக்கள் கூட்டணி (PA ) 1, சுயேட்சை 3 ஆசனங்களை ப் பெற்றிருந்தன.

இந்த நிலையில் பிரதேச சபைத் தலைவரைத் தெரிவு செய்வதற்காக இன்று நடந்த வெளிப்படையான தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி (9) ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன (6), ஐக்கிய தேசியக் கட்சி (2), சர்வஜன அதிகாரம் (2), மக்கள் கூட்டணி (PA ) (1), சுயேட்சை (3) இணைந்து வழங்கிய 23 வாக்குகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் லசந்த விக்ரமசேகர வெலிகம பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவானார்.

எதிர்க் கட்சி உறுப்பினர் தெனகம ராஹுல தேரோ பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

Popular

More like this
Related

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...