இலங்கை– துருக்கி இடையே பொருளாதாரம், முதலீடு, கல்வி உள்ளிட்ட பல துறைகளை விரிவுபடுத்த நடவடிக்கை!

Date:

இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டுக் குழுவின் (JCETC) மூன்றாவது அமர்வு இன்று (24) கொழும்பில் ஆரம்பமானது.

இதற்கு வர்த்தகம், வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் துருக்கி தேசிய கல்வி அமைச்சர் யூசுப் டெக்கின் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இலங்கைக்கும் துருக்கியக் குடியரசுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, கல்வி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான மூலோபாய அணுகுமுறைகளுக்கானது.

அமர்வில், புதிய வாய்ப்புகளை ஆராயும் நோக்கத்துடன், இரு நாடுகளைச் சேர்ந்த சிரேஷ்ட அரச அதிகாரிகள், முன்னணி வணிகத் தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...