இலஞ்ச, ஊழல் விசாரணை அதிகாரியை அச்சுறுத்திய குற்றச்சாட்டு: விளக்கமறியலில் உள்ள வைத்தியரின் மகள் கைது.

Date:

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக இக்கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நரம்பியல் விசேட மருத்துவ நிபுணர் மஹேஷி விஜேரத்ன தம்மிடம் வரும் நோயாளர்களை தனியார் மருந்தகங்களுக்கு அனுப்பி அங்கு மருந்துகள், உபகரணங்களை கொள்வனவு செய்ய பணிப்புரை விடுத்தமை, முறைகேடாக வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் (04) குறித்த வைத்திய நிபுணரின் மகள், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து மிரட்டிய சம்பவமொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

துருக்கி ஜனாதிபதி அர்தூகான் சவூதி விஜயம்: இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய மைல்கல்.

செவ்வாய்க்கிழமை (03,) அன்று ரியாத் நகருக்கு துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப்...

ரியாதிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

ரியாத் இலங்கைத் தூதரகத்தில் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டம் சவூதி அரேபியாவின் ரியாத்...

இலங்கையின் முதல் பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜெயரத்ன பதவியேற்றார்!

புதிய கணக்காய்வாளராக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்....

எப்ஸ்டீன் ஆவணங்கள்: 188 இடங்களில் ‘இலங்கை’ பெயர்.

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில்...