கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் வெட்டு

Date:

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை (07) 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (‍NWSDB) தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் சபுகஸ்கந்த துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக, 7 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும், பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைபடும் என்றும் NWSDB குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க/சீதுவை நகர சபைப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

இதேபோன்று, களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான, மினுவாங்கொடை பிரதேச சபை மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும்.

 

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...