கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் வெட்டு

Date:

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை (07) 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (‍NWSDB) தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் சபுகஸ்கந்த துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக, 7 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும், பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைபடும் என்றும் NWSDB குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க/சீதுவை நகர சபைப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

இதேபோன்று, களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான, மினுவாங்கொடை பிரதேச சபை மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும்.

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...