கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் வெட்டு

Date:

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் எதிர்வரும் திங்கட்கிழமை (07) 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (‍NWSDB) தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் சபுகஸ்கந்த துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக, 7 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும், பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைபடும் என்றும் NWSDB குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க/சீதுவை நகர சபைப் பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும்.

இதேபோன்று, களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கட்டான, மினுவாங்கொடை பிரதேச சபை மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படும்.

 

Popular

More like this
Related

புனித ஹஜ் பயணம் ஆரம்பம்: சவூதி அரேபியாவிற்கு வருகை தந்துள்ள இந்திய உள்ளிட்ட நாடுகளின் முதல் குழுவினர்!

இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக...

இலங்கையின் ஏற்றுமதி வருமானம் 1.59% அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் ஏற்றுமதி வருமானத்தில் சரிவு காணப்பட்ட...

சுதந்திரமும் நீதியும் பொதுவானவை: மண்டேலா அறக்கட்டளையில் திரையிடப்பட்ட ‘பாலஸ்தீனம் 36’ திரைப்படம்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நெல்சன் மண்டேலா அறக்கட்டளையின் மண்டபம் நேற்று (22)...