மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவு ஆய்வு இருக்கை – கடல் கடந்து அங்கீகரிக்கப்பட்ட தமிழ் சேவை!

Date:

தமிழுக்கு கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஆற்றிய சேவை இன்று கடல் கடந்து உலகளாவிய அங்கீகாரம் பெற்றுள்ளதை, மலேசிய இந்திய காங்கிரஸ் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

உலகின் மிகச் சிறந்த மற்றும் முதன்மை பல்கலைக்கழகங்களில் ஒன்றாக கருதப்படும் மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில், இந்திய ஆய்வியல் துறையின் கீழ் கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவு ஆய்வு இருக்கை நிறுவப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வு இருக்கை ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை, மலேசிய இஸ்லாமிய அறவாரியம் முயற்சியில் அமைக்கப்பட்டுள்ளது.

சாகித்திய அகடமி விருது பெற்ற கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் பெரும் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இந்த ஆய்வு இருக்கை அமைக்கப்பட்டுள்ளமை, தமிழருக்கே ஒரு பெருமையாகும்.

“தமிழனின் தனிப்பெரும் அடையாளமாக விளங்கிய கவிக்கோ அப்துல் ரஹ்மான், தமிழ் இலக்கியத்தின் வரலாற்றில் அழியாத தடம் பதித்துள்ளார்.
படைப்புக்கும் படைப்பாளிக்கும் மரணம் இல்லை என்பதற்கான உன்னத சான்று இன்றைய நிகழ்வே. தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை,” என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு, தமிழ் மொழிக்கும், இலக்கிய வரலாற்றுக்கும் புதிய அடையாளம் சேர்த்துள்ளதோடு, கவிக்கோவின் சேவையை உலகிற்கு உணர்த்திய முக்கிய கட்டமாகவும் அமைகிறது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...