சவூதி அரேபியாவில் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை பிரிக்கும் அறுவை சிகிச்சை ஆரம்பம்!

Date:

சவூதி அரேபியாவின் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களான யாரா மற்றும் லாராவைப் பிரிக்கும் பெரும் அறுவைச் சிகிச்சை இன்று ரியாத்திலுள்ள மன்னர் அப்துல்லா சிறப்பு குழந்தைகள் மருத்துவமனையில் தொடங்கியுள்ளது.

இந்த அறுவைச் சிகிச்சை, மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

இந்த அறுவைச் சிகிச்சை உலக அளவில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ள ஒரு சிக்கலான மருத்துவ நடவடிக்கையாகும்.

மொத்தம் ஒன்பது நிலைகளைக் கொண்ட இந்த அறுவைச் சிகிச்சை சுமார் 15 மணி நேரம் வரை நீடிக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அபூர்வமான மற்றும் நுணுக்கமான மருத்துவ செயல்பாடுகளில் ஒன்றாக கருதப்படும் இந்த அறுவை சிகிச்சை, சிறுவர் மருத்துவ நிபுணர்களின் குழுவால் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்படுகிறது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...