சைப்பிரஸில் இலங்கை தூதரக சேவைகள் மீண்டும் ஆரம்பம்; புதிய கொன்சுலர் ஜெனரலாக யூ.எல் நியாஸ் பதவியேற்றார்

Date:

சைப்பிரஸில் உள்ள நிக்கோசியாவில் இலங்கை பொது தூதரகம் தனது செயல்பாடுகளை மீளவும் தொடங்கியதை அடுத்து இலங்கை அரசாங்கத்தின் தூதரகப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புதிய பொது தூதராக நியமிக்கப்பட்டுள்ள யு.எல். நியாஸ் ஜூலை 21 அன்று நிக்கோசியாவில் தனது பணிகளைப் பொறுப்பேற்றார்.

ஜூலை 22 அன்று சைப்பிரஸ் குடியரசின் அரசு நெறிமுறைத் தலைவர் கூலா சோஃபியானுவைச் சந்தித்து தனது நற்சான்றிதழ் பத்திரத்தை வழங்கிய பொதுத் தூதுவர் அவர்கள், தூதரகம் முன்னதாக தற்காலிகமாக மூடப்பட்ட காரணங்களை விளக்கியதுடன், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் இலக்குடன் அதனை மீளத் திறப்பதற்கு இலங்கை அரசு எடுத்துள்ள தீர்மானத்தையும் எடுத்துக் கூறினார்.

புதிய பொது தூதரை வரவேற்ற கூலா சோஃபியானு, தூதரகத்தை மீள அமைக்கும் பணிகளில் சைப்பிரஸ் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கும் என்று உறுதியளித்தார்.

தற்காலிக இடத்தில் இருந்து தொடங்கும் இந்த தூதரகம், விரைவில் நிரந்தர இடத்திற்கு மாற்றப்படுவதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

சைப்பிரஸில் உள்ள இலங்கையர்களுக்குத் தேவையான தூதரக சேவைகளை இந்த பொதுத் தூதரகம் ஏற்பாடு செய்து கொடுக்கும்.

இந்த தூதரக நடவடிக்கைகள் தற்காலிகமாக துருக்கியில் உள்ள இலங்கை தூதரகத்தின் கீழ் செயல்படும்.

2012 ஆம் ஆண்டில் இலங்கை வெளிநாட்டு சேவையில் சேர்ந்த அஷ்ஷைக் யு.எல். நியாஸ் (நளீமி) , அதற்கு முன்னர் 2003 முதல் 2011 வரை இலங்கை நிர்வாக சேவையில் பணியாற்றியுள்ளார்.

வெளிநாட்டு அமைச்சின் நெறிமுறை பிரிவு, தூதரக அலுவல்கள் பிரிவு மற்றும் வெளிநாட்டு தூதரக நிர்வாகப் பிரிவுகளிலும் இவர் பொறுப்பேற்று பணியாற்றியுள்ளார்.

மேலும், ரியாத், இஸ்லாமாபாத் மற்றும் ஜித்தாவிலும் பணியாற்றிய அனுபவமும் பெற்றுள்ளார்.

புதிய நியமிக்கப்பட்ட இணை அதிகாரியான சாந்த செனெவிரத்ன அவருடன் இணைந்துள்ளார்.

Popular

More like this
Related

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...

யாழ். செல்வா கலையரங்கில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம்.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து  31...