ஒக்டோபர் முதல் டிஜிட்டல் சேவைகளுக்காக வரி அறவிட தீர்மானம்

Date:

அக்டோபர் முதலாம் திகதி முதல் நாட்டில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கான பெறுமதி சேர் வரியை (VAT) விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறிப்பிடத்தக்க டிஜிட்டல் சேவைகள் வரும் அக்டோபர் முதலாம் திகதி முதல் 18 ஆம் தேதி வரை வரிக்கு உட்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டத்தின்படி, டிஜிட்டல் சேவைகளுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த புதிய டிஜிட்டல் சேவை வரி தொடர்பான வழிகாட்டுதல்களை 2025 ஜூலை மாதம் முதல் தேதி 2443/30 இலக்க விசேட வர்த்தமானி மூலமாக வெளியிட்டிருந்தது.

இலங்கையில் உள்ள நபர் ஒருவருக்கு மின்னணு தளம் மூலம் சேவைகளை வழங்கும் வெளிநாட்டினரும் இந்த டிஜிட்டல் சேவைகளுக்கு வரி செலுத்த நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் 60 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான சேவைகளை வழங்கியவர்கள் அல்லது கடந்த காலாண்டில் 15 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான சேவைகளை வழங்கியவர்கள் வற் வரிக்கு பதிவு செய்வது கட்டாயமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறிப்பிடத்தக்க டிஜிட்டல் சேவைகளுக்கு வரும் அக்டோபர் முதலாம் திகதி முதல் 18ஆம் திகதி வரை வரி விதிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...