பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

Date:

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம் சேவையின் முதுபெரும் கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப், (03) ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானாா்.

நாடகத் துறையில் தனக்கென தனியான பெயரைப் பெற்றிருந்தவர். மேடை நாடகம், வானொலி நாடகம், சினிமா, சின்னத்திரை என இவரது கலைப்பயணம் நீண்டிருந்தது.

இஸ்லாமிய கீதங்கள் பலவற்றையும் இவர் பாடியுள்ளார்.“லியாஉல் – ஃபன்னான்” கலைச்சுடர் எம்.எம்.ஏ லத்தீப் “புதுக்கடை லத்தீப்” என கலை உலகில் பவனி வந்தவர்.
1945 இல் கொழும்பு, புதுக்கடையில் பிறந்தவர். அரசு விருதுகள் மற்றும் பல விருதுகளையும் பெற்றவர்.

முஸ்லிம் சேவையில் பல நாடகங்களில் தனது குரலால் மக்கள் மனதையும் வென்றவர்.

அன்னாரது ஜனாஸா, (04) திங்கட்கிழமை ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து 12:30 மணியளவில், கொழும்பு – மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Popular

More like this
Related

அல் குர்ஆன் மொழிபெயர்ப்பில் தீவிரவாதக் கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளதாம்; தடுமாறும் உலமாக்களின் மீள்பரிசீலனைக் குழு

 அபூ அய்மன் மதம் சார்ந்த தவறான புரிதல் என்பது அறியாமையல்ல. அவை திட்டமிட்டவகையில்...

வெலிகம பிரதேச சபையின் வெற்றிடத்துக்கு சமீர தனுஷ்க டி சில்வா நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சமீர தனுஷ்க டி சில்வா...

டெல்லி குண்டு வெடிப்பு: வெளிப்படையான, உயர் மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் வேண்டுகோள்

செங்கோட்டை வெடிச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்...

நம்பிக்கையை நசுக்கிய வரவு–செலவுத்திட்டம்: புத்தளம் மரிக்காரின் கவிதை வரிகள்!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வரவு–செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி ஒதுக்கியுள்ள நிதித்திட்டங்கள் குறித்து...