உலமா சபையின் புதிய நிர்வாகத்தின் கவனத்திற்கு: அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீலின் ஆலோசனைகள்

Date:

இலங்கையில் உள்ள முக்கிய இஸ்லாமிய அமைப்பாக விளங்கும் உலமா சபையின் புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெறுகிறது.

இந்நிலையில்,  ஜாமிஆ நளீமிய்யாவின் இஸ்லாமிய கற்கைகள் பீட பீடாதிபதி அஷ்ஷைக் S.H.M. பளீல் (நளீமி) அவர்கள் முன்வைத்துள்ள உலமா சபையின் புதிய நிறைவேற்றுக் குழுவிற்கான பொறுப்புக்கள்:

1. முஸ்லிம் விவாக – விவாகரத்து தொடர்பாக வருடக் கணக்கில் தீர்வு காணப்படாதிருக்கும் சர்ச்சைக்கு தீர்வாக ஒருமித்த ஆவணத்தை தயாரிப்பது

2. சுங்கத் திணைக்களத்தில் விடுவிக்கப்படாமலிருக்கும் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகள் தொடர்பாக தீர்க்கமான முடிவுக்கு வருவது

3. சிலரால் எழுதப்பட்ட இஸ்லாமிய நூல்கள் உள்நாட்டுக்கு வரக்கூடாது என்று அரசாங்கத்தைக் கோரும் கடிதமொன்றை ஜம்இய்யாவில் அங்கம் வகிக்கும் சிலர் உட்பட எட்டுப் பேர் கையொப்பமிட்டு அரசாங்கத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள்.அது முஸ்லிம்களுக்கு மத்தியில் சர்ச்சையாக இருப்பதால் அது விடயமாக தீர்க்கமான முடிவுக்கு வருவது.

4. அரபு மத்ரஸாக்களுக்காகான ஒருமித்த பாட விதானம் ஒன்றுக்கான முன்மொழிவுகளை ஏற்கனவே நிபுணர்கள் குழுவொன்று முன்வைத்துள்ளது.அக்குழுவின் பணிகள் தொடரவில்லை.எனவே அதனை தொடர்வதற்கான முயற்சிகளைச் செய்வது.

இவை பணிவான வேண்டுகோள்கள். புதிய நிர்வாகம் தமது பணிகளை செவ்வனே செய்ய வேண்டும் என்று அல்லாஹுத்தஆலாவை பிரார்த்திக்கின்றோம்.

Popular

More like this
Related

சுவசெரிய படையணியை 500 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டம்

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுவசெரிய அம்பியூலன்ஸ்  வண்டி படையணியை 500 ஆக...

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: முஸ்லிம் மக்கள் அதிகம்கொண்ட தொகுதிகளையும் கைப்பற்றுகிறதா தேசிய ஜனநாயகக் கூட்டணி?

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரங்கள் வெளியாகி...

இஸ்ரேலில் இலங்கை தொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு!

இஸ்ரேலில் 38 வயதான இலங்கை தொழிலாளர் ஒருவர் வியாழக்கிழமை (13) இரவு...

புதிய கல்வி சீர்திருத்தங்கள்: வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் ஆசிரியர் தொழிற்சங்கங்கள்!

பாடசாலை நேரத்தை பிற்பகல் 2:00 மணி வரை நீட்டிப்பது உட்பட அரசாங்கத்தின்...