உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

Date:

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க அறிஞர் உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்” என்ற நூல் வெளியீட்டு விழா இன்று 6ஆம் திகதி பிற்பகல் 4.30 மணி முதல் 6.30 மணி வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் அதிதிகளாக ஸம் ஸம் பவுண்டேஷன் தலைவர் முப்தி யூஸும் ஹனீபா, ஜாமியா நளீமியாவின் தலைவர் அல்ஹாஜ் யாகூத் நளீம், பிரபல சமூக சேவையாளரும் நெஸ்ட் அகடமியின் தலைவருமான அல்ஹாஜ் எஸ்.எல்.எம்.பௌஸ் பேராதனை பல்கலைக்கழக வாய்வழி மற்றும் முகவாய் மருத்துவம் மற்றும் கதிர்வீச்சு துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் எம்.ஏ.எம். சித்தீக் ஆகியோர் கலந்துகொள்வதோடு அஷ்ஷெய்க் ஏ.சி.அகார் முஹம்மத் பற்றிய ஆவணப்படமும் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

நூல் விமர்சனத்தை பிரபல குழந்தை நல வைத்தியர் டாக்டர் ரயீஸ் முஸ்தபா நிகழ்த்தவுள்ளார்.

Popular

More like this
Related

வெலிகம பிரதேச சபையின் வெற்றிடத்துக்கு சமீர தனுஷ்க டி சில்வா நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சமீர தனுஷ்க டி சில்வா...

டெல்லி குண்டு வெடிப்பு: வெளிப்படையான, உயர் மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் வேண்டுகோள்

செங்கோட்டை வெடிச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்...

நம்பிக்கையை நசுக்கிய வரவு–செலவுத்திட்டம்: புத்தளம் மரிக்காரின் கவிதை வரிகள்!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வரவு–செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி ஒதுக்கியுள்ள நிதித்திட்டங்கள் குறித்து...

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது...