தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

Date:

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற் கொண்டு இன்று (06) நள்ளிரவு முதல் பரீட்சை முடியும் வரை மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பிற பட்டறைகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 2025 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கும் மேலதிகமாக, பரீட்சை தொடர்பான கேள்விகள் அல்லது அதுபோன்ற உள்ளடக்கம் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று பரிந்துரைக்கும் சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள் அல்லது விளம்பரங்களை ஒன்லைன் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் வெளியிடுவது மற்றும் விநியோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை மீறும் எந்தவொரு தனிநபர், நிறுவனம் தொடர்பாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...