‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

Date:

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய ‘செம்மணி’ எனும் தலைப்பிலான நூல் வெளியீடும் ‘இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் மனித புதை குழிகள்’ தொடர்பான கலந்துரையாடலும் இன்று வியாழக்கிழமை பி.ப.2.30 மணிக்கு தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சபை கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

மேற்படி நிகழ்வில் ‘இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் மனித புதைக்குழிகள் தொடர்பான கலந்துரையாடலை ருகி பெர்ணான்டோ நெறிப்படுத்தவுள்ளார்.

அத்தோடு சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா, பிரிட்டோ பெர்ணான்டோ ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், ஊடகவிய லாளர் சகுண எம்.கமகே மற்றும் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் ஆகியோர் கலந்துரையாடலில் பங்கேற்கின்றனர்.

இந்நிகழ்வினை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...