பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

Date:

அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (18) திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளன.

2025 கல்வி ஆண்டிற்கான தமிழ், சிங்களம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை கடந்த ஓகஸ்ட் 07 ஆம் திகதி முதல் நேற்று (17) வரை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான முதல் கட்டட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் 18 முதல் நவம்பர் 16 வரை விடுமுறை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 3ஆம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 17 முதல் டிசம்பர் 19 வரை இடம்பெறும்.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் (20) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) வரை 5 நாட்கள் இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...