தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் கைது!

Date:

தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ இன்று (19) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு நீதிவான் நீதிமன்றம் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையை உத்தரவினை நேற்று (18) பிறப்பித்ததன் பின்னணியில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவு முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இந்த பிடியாணையை உத்தரவினை பிறப்பித்தார்.

நாரஹேன்பிட்டி பகுதியில் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து கொழும்பு குற்றப்பிரிவு அண்மையில் விசாரணையைத் தொடங்கியது.

அந்த விசாரணை தொடர்பாக பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...