முப்பெரும் நினைவுப் பேருரைகள் செப்.2 இல் கொழும்பில்..!

Date:

அல்-அஸ்லாப் முன்னோர் நினைவு மன்றம் ஏற்பாடு செய்யும் முப்பெரும் நினைவுப்பேருரைகள் வைபவம் எதிர்வரும் செப்டம்பர் 2ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4மணிக்கு கொழும்பு 10 டீ.ஆர்.விஜயவர்தன மாவத்தையிலுள்ள தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

இவ்வைபவத்துக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ், கௌரவ அதிதியாக கொழும்பு மாநகர முன்னால் மேயரும் சோனக இஸ்லாமிய கலாச்சார நிலைய தலைவருமான அல் ஹாஜ் ஒமர் காமில், ஸினத் நிறுவனத் தலைவர் AHM மாஹிர் சிறப்பு அதிதியாகவும் வருகை தரவுள்ளனர்

அல்-அஸ்லாப் மன்றத் தலைவர் MHM.நியாஸ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பேராதனைய பல்கலைக்கழக பேராசிரியர் MSM. அனஸ் (மெய்யியல் துறையின் முன்னாள் தலைவர்) ஜாமிஆ நளீமிய்யாவின் இஸ்லாமிய கற்கைகள் பீட பீடாதிபதி அஷ்ஷைக் S.H.M. பளீல் (நளீமி), மூத்த ஊடகவியலாளர் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் NM.அமீன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தவுள்ளனர்.

மன்றத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர், MZ.அஹமத் முனவ்வர் இந்நிகழ்வை நெறிபடுத்த உள்ளார்.

இது சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் வாழ்ந்து மறைந்த தலைமைகளை நினைவு கூறுவதற்காக உருவாக்கப்பட்ட அல்-அஸ்லாப் நினைவு மன்றம் நடத்தும் இரண்டாவது நினைவு பேருரை என மன்றச் செயலாளர் ஹில்மி முஹம்மத் (முன்னாள் தகவல் திணைக்களப் பணிப்பாளர்) தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...