புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைவு செப்டம்பரில் நிறைவு!

Date:

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக அமைச்சரவையின் ஒப்புதலின் கீழ் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என அக்  குழுவின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழு நேற்று (27) பிற்பகல் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சில் கூடிய போதே, ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன இக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

தற்போது சட்டமூலத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் இரண்டாவது முறையாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தலைவர் கூறினார்.

நாட்டில் அமுலாகியுள்ள 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை இரத்து செய்து, புதிய சட்டமூலத்தை வரைவதற்கு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவது, நவீன உலகளாவிய பயங்கரவாத சவால்களுக்கு முகம் கொடுப்பது, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தனிநபர்களின் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளுக்கு இணங்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

QR குறியீட்டை பழைய பயனர்கள் தடையின்றிப் புதுப்பித்துக் கொள்ளலாம்!

ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் தற்போதும் அதே வாகனம்...

IMF பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதியில் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இந்த மாத இறுதியில் இலங்கைக்கு...

அரசு நிறுவனங்களின் முறைகேடுகளைக் கண்டறிய புதிய விசாரணை அதிகாரி குழு!

அரசு நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக புதிய விசாரணை...

எரிபொருள் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும்: லங்கா ஐஓசி

இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும், அதற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச்...