தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

Date:

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள் மகள் சாம் குறித்து எழுதிய உணர்ச்சி பூர்வமான பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.

படுகொலை செய்யப்பட்ட தியாகி அனஸ் ஷரீபின் மனைவி சின்னஞ்சிறு சாம் குறித்து இப்படி எழுதுகிறார்.

மகள் சாம் எப்போதுமே தந்தை அனஸுடனேயே இருப்பாள். செய்தித் தயாரிப்பு நடக்கும் சமயங்களிலும் கூட தன் தந்தையை அங்குமிங்கும் தேடுவாள்.

ரேடியோவில் தந்தையின் குரல் வரும் போது அப்போது தான் முதற் தடவையாக கேட்பது போன்று கேட்பாள்.

தனது தந்தையின் மரணத்தின் பின் அவரின் பணியை சாம் நிறைவேற்றும் ஒரு நாள் வரும். அப்போது அவரின் அடிச்சுவட்டை தொடரும் குரலாக சாம் மாறுவாள் ”

அனஸ் சரீப், காசாவில்  இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தார். அவரது தியாகம், பலஸ்தீன மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் சின்னமாக திகழ்கிறது.

அவரின் மரணம், காசாவில் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் பத்திரிகையாளர்களின் தியாகத்தின் சின்னமாக உலகளவில் நினைவுகூரப்படுகிறது.

Popular

More like this
Related

மோட்டார் வாகன திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர் நாயகம்

மோட்டார் வாகன திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக ஓய்வுப்பெற்ற எயார் மார்ஷல்...

சுரேஷ் சலேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்...

திட்வா புயல் காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

திட்வா புயல் காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி...

அமெரிக்காவின் பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்: அகமது அல்-ஷரா வரவேற்பு

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கான அமெரிக்காவின் பட்டியலிலிருந்து சிரியா அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டிருப்பதைச் சிரிய...