இலங்கை வரலாற்றில் அழியாத கரும்புள்ளி: ஏறாவூரில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களை நினைவுகூரும் 35வது ஸுஹதாக்கள் தினம்!

Date:

 ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் 1990 ஆகஸ்ட் 12ஆம் திகதி இடம்பெற்ற படுகொலையின் 35ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

 தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 121 முஸ்லிம்கள் வெட்டிக் கொல்லப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துயரச் சம்பவம் இலங்கை வரலாற்றில் அழியாத கரும்புள்ளியாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனங்களில் ஆறாத காயமாகவும் இருந்து வருகிறது. புலிகளின் இந்த தாக்குதலில் 60 முஸ்லிம் குழந்தைகள் மரணத்தை சுவாசித்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளிலும், பள்ளிவாசல்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் இடம்பெற்றன. அரசியல் சமூக தலைவர்கள் கலந்து கொண்டு, உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

அதேநேரம் “அல்லாஹ் அந்த ஷுஹதாக்களை பொருந்திக் கொள்ளட்டும்; அவர்களுக்கு சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்தை வழங்கட்டும்” என கலாநிதி எம்.எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

வெலிகம பிரதேச சபையின் வெற்றிடத்துக்கு சமீர தனுஷ்க டி சில்வா நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சமீர தனுஷ்க டி சில்வா...

டெல்லி குண்டு வெடிப்பு: வெளிப்படையான, உயர் மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் வேண்டுகோள்

செங்கோட்டை வெடிச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்...

நம்பிக்கையை நசுக்கிய வரவு–செலவுத்திட்டம்: புத்தளம் மரிக்காரின் கவிதை வரிகள்!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வரவு–செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி ஒதுக்கியுள்ள நிதித்திட்டங்கள் குறித்து...

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது...