இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 5 அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்

Date:

காசா நகரின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே இஸ்ரேலிய தாக்குதலில் ஐந்து அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்.

இறந்தவர்களில் நிருபர்கள் அனஸ் அல்-ஷெரிப் மற்றும் முகமது கிரீகே, கேமராமேன்கள் இப்ராஹிம் ஜாஹர், முகமது நௌபால் மற்றும் மோமென் அலிவா ஆகியோர் அடங்குவர்.

மருத்துவமனை தாக்கப்பட்டபோது மருத்துவமனையின் பிரதான வாயிலில் பத்திரிகையாளர்களுக்கான கூடாரத்தில் இருந்த ஏழு பேர் கொண்ட குழுவில் அவர்களும் அடங்குவர்.

இஸ்ரேலிய இராணுவம், அல் ஜசீராவின் அனஸ் அல்-ஷெரீப்பை குறிவைத்ததாக ஒப்புக்கொண்டது.

அவரை “பயங்கரவாதி” என்றும், அவர் “பத்திரிகையாளராகக் காட்டிக் கொண்டார்” என்றும் குறிப்பிட்டது.

இஸ்ரேலுக்கும், அல் ஜசீராவிற்கும் இடையே தொடர்ந்து பதட்டங்கள் நிலவி வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதலை அல் ஜசீரா கடுமையாக கண்டித்துள்ளது. இது ஒரு “இரத்தக்களரி குற்றம்” என்று கூறியுள்ளது.

Popular

More like this
Related

கபில சந்திரசேனவின் மரணம் குறித்து பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன...

வியட்நாம் – இலங்கை இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

வியட்நாம் மற்றும் இலங்கை இடையே பல்வேறு துறைகள் சார்ந்து கைச்சாத்திடப்பட்ட 05...

தெனியாயவில் பரவும் காய்ச்சல் குறித்து ஆராய விசேட குழு!

தெனியாய வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே வேகமாகப் பரவி வரும்...

இரு தரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் டொலராக விரிவுபடுத்த இலங்கை-வியட்நாம் இணக்கம்!

2030- ஆம் ஆண்டுக்குள் ஆண்டு இருதரப்பு வர்த்தகத்தை ஒரு பில்லியன் டொலராக...