நான்காவது அறிவுக் களஞ்சியம் இறுதிப் போட்டி கொழும்பில்..!

Date:

தேசிய மட்டத்திலான நான்காவது அறிவுக் களஞ்சிய நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியானது நாளை 23 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 04.30 மணிக்கு கொழும்பு, தெமட்டகொட வீதியிலுள்ள இஸ்லாமிக் புக் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

09 மாகாணங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட அணிகளுக்கிடையிலான போட்டி அன்று நடைபெறும்.

1972 ஆம் ஆண்டு அந்நாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர் மர்ஹும் வி. ஏ. கபூரினால் வடிவமைக்கப்பட்டு, ராவுத்தர் நைனா முஹம்மதினால் அவருக்கே உரிய பாணியில் நீண்ட காலமாக முஸ்லிம் சேவையில் ஒரு ஜனரஞ்சக நிகழ்ச்சியாக ஒலிபரப்பாகி வந்த அறிவுக் களஞ்சியம் நிகழ்ச்சி, சில தவிர்க்க முடியாத காரணங்களினால் 1990 ஆம் ஆண்டுகளில் இடைநிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் 1999 முதல் அனுசரணை நிகழ்ச்சியாக காலை வேளை முஸ்லிம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகத் தொடங்கியது.

2005 ஆம் ஆண்டு முதல் கொழும்பு இஸ்லாமிக் புக் ஹவுஸ் நிறுவனம் இந்நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்க முன்வந்து இன்றுடன் 20 வருடங்களாக தொடர்ச்சியாக அனுசரணை வழங்கி வருகின்றது.

இதுவரை 2005 ஆம் ஆண்டு BMICH இலும், 2012 ஆம் ஆண்டு கொழும்பு ஸாஹிராக் கல்லூரியிலும், 2017 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஆனந்த சமரகோன் கலையகத்திலும் மூன்று இறுதிப் போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு, 04 ஆவது இறுதிப் போட்டி நிகழ்ச்சி நாளை 23 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு இஸ்லாமிக் புக் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் கோலாகலமாக நடாத்த முஸ்லிம் சேவையும், இஸ்லாமிக் புக் ஹவுஸும் இணைந்து ஏற்பாடுகளைச் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...