இறைவனின் இருப்பு தொடர்பில் சிங்கள மொழியில் நூல் வெளியீடு நாளை

Date:

பிரித்தானிய ஆய்வாளரும் நூலாசிரியருமான ஹம்ஸா அந்தரீஸ் சோர்ஸிஸ் எழுதிய The Devine Reality என்ற ஆங்கில நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு நூல் நாளை வெளியிட்டு வைக்கப்படவுள்ளது.

ஆய்வுக்கும் கற்கைகளுக்குமான மன்றத்தினால் (FRS) கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வு நாளை (28) மாலை 4.00 மணிக்கு நடைபெறும்.

இறைவனின் இருப்பு தொடர்பில் விளக்கும் இந்த நூல் கொழும்பு பல்கலைக்கழக ஸ்ரீ பாளி பீடத்தின் நாட்டிய மற்றும் அரங்கக் கலை வருகைதரு விரிவுரையாளர் சமன் புஷ்ப லியனகே யினால் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிங்கள மொழிப்பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக்க ஜயசின்ஹ, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுமேத வீரவர்தன, மத ஆய்வாளர் ஷான் சிராஜ் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.

Popular

More like this
Related

கத்தாரில் உயிரிழந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு

கத்தார் இராச்சியத்தில் பணியிலிருந்த போது உயிரிழந்த இலங்கையர்களான இழப்பீட்டை அங்குள்ள இலங்கை...

இவ்வருடத்தின் கடந்த 22 நாட்களில் இவ்வருடத்தின் கடந்த 22 நாட்களில்

இவ்வருடத்தின் கடந்த 22 நாட்களில் மாத்திரம் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு...

இன்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் பணிப்பகிஷ்கரிப்பு

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணி பகிஷ்கரிப்பு இன்றைய தினமும்...

புத்தளம் மாவட்ட வெள்ளத் தடுப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக சீனப் பொறியியலாளர்கள் விசேட கலந்துரையாடல்.

அண்மையில் டிட்வா அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும்...