முப்பெரும் நினைவுப் பேருரைகள் செப்.2 இல் கொழும்பில்..!

Date:

அல்-அஸ்லாப் முன்னோர் நினைவு மன்றம் ஏற்பாடு செய்யும் முப்பெரும் நினைவுப்பேருரைகள் வைபவம் எதிர்வரும் செப்டம்பர் 2ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4மணிக்கு கொழும்பு 10 டீ.ஆர்.விஜயவர்தன மாவத்தையிலுள்ள தபால் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

இவ்வைபவத்துக்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ், கௌரவ அதிதியாக கொழும்பு மாநகர முன்னால் மேயரும் சோனக இஸ்லாமிய கலாச்சார நிலைய தலைவருமான அல் ஹாஜ் ஒமர் காமில், ஸினத் நிறுவனத் தலைவர் AHM மாஹிர் சிறப்பு அதிதியாகவும் வருகை தரவுள்ளனர்

அல்-அஸ்லாப் மன்றத் தலைவர் MHM.நியாஸ் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பேராதனைய பல்கலைக்கழக பேராசிரியர் MSM. அனஸ் (மெய்யியல் துறையின் முன்னாள் தலைவர்) ஜாமிஆ நளீமிய்யாவின் இஸ்லாமிய கற்கைகள் பீட பீடாதிபதி அஷ்ஷைக் S.H.M. பளீல் (நளீமி), மூத்த ஊடகவியலாளர் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் NM.அமீன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தவுள்ளனர்.

மன்றத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர், MZ.அஹமத் முனவ்வர் இந்நிகழ்வை நெறிபடுத்த உள்ளார்.

இது சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் வாழ்ந்து மறைந்த தலைமைகளை நினைவு கூறுவதற்காக உருவாக்கப்பட்ட அல்-அஸ்லாப் நினைவு மன்றம் நடத்தும் இரண்டாவது நினைவு பேருரை என மன்றச் செயலாளர் ஹில்மி முஹம்மத் (முன்னாள் தகவல் திணைக்களப் பணிப்பாளர்) தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...