பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

Date:

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம் சேவையின் முதுபெரும் கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப், (03) ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானாா்.

நாடகத் துறையில் தனக்கென தனியான பெயரைப் பெற்றிருந்தவர். மேடை நாடகம், வானொலி நாடகம், சினிமா, சின்னத்திரை என இவரது கலைப்பயணம் நீண்டிருந்தது.

இஸ்லாமிய கீதங்கள் பலவற்றையும் இவர் பாடியுள்ளார்.“லியாஉல் – ஃபன்னான்” கலைச்சுடர் எம்.எம்.ஏ லத்தீப் “புதுக்கடை லத்தீப்” என கலை உலகில் பவனி வந்தவர்.
1945 இல் கொழும்பு, புதுக்கடையில் பிறந்தவர். அரசு விருதுகள் மற்றும் பல விருதுகளையும் பெற்றவர்.

முஸ்லிம் சேவையில் பல நாடகங்களில் தனது குரலால் மக்கள் மனதையும் வென்றவர்.

அன்னாரது ஜனாஸா, (04) திங்கட்கிழமை ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து 12:30 மணியளவில், கொழும்பு – மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

( ஐ. ஏ. காதிர் கான் )

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...