பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர் ஹாஷிமின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.கோபா குழுவின் தலைவர் பதவியில் இருந்து நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் பதவி விலகல் செய்துள்ளார்.நாடாளுமன்றத்தில் விசேட உரை ஒன்றை ஆற்றிய போது அவர் தனது பதவி விலகல் முடிவை அறிவித்தார்.
கோபா குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்க இணக்கம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு வழி வகுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் குறிப்பிட்டார்.
கடந்த ஜனவரி 24 ஆம் திகதி கோபா குழுவின் தலைவராக அரவிந்த செனரத் நியமிக்கப்பட்டதுடன், சுமார் ஏழு மாதங்களாக இந்தப் பதவியில் இருந்து வந்தார்.
இந்நிலையில் எதிர்க்கட்சியால் முன்மொழியப்பட்டுள்ள கபீர் ஹாசிமின் நியமனம் விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.