அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (18) திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளன.
2025 கல்வி ஆண்டிற்கான தமிழ், சிங்களம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை கடந்த ஓகஸ்ட் 07 ஆம் திகதி முதல் நேற்று (17) வரை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ், சிங்கள பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான முதல் கட்டட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 18 முதல் நவம்பர் 16 வரை விடுமுறை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய 3ஆம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 17 முதல் டிசம்பர் 19 வரை இடம்பெறும்.
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் (20) முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) வரை 5 நாட்கள் இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.