தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

Date:

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள் மகள் சாம் குறித்து எழுதிய உணர்ச்சி பூர்வமான பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படுகிறது.

படுகொலை செய்யப்பட்ட தியாகி அனஸ் ஷரீபின் மனைவி சின்னஞ்சிறு சாம் குறித்து இப்படி எழுதுகிறார்.

மகள் சாம் எப்போதுமே தந்தை அனஸுடனேயே இருப்பாள். செய்தித் தயாரிப்பு நடக்கும் சமயங்களிலும் கூட தன் தந்தையை அங்குமிங்கும் தேடுவாள்.

ரேடியோவில் தந்தையின் குரல் வரும் போது அப்போது தான் முதற் தடவையாக கேட்பது போன்று கேட்பாள்.

தனது தந்தையின் மரணத்தின் பின் அவரின் பணியை சாம் நிறைவேற்றும் ஒரு நாள் வரும். அப்போது அவரின் அடிச்சுவட்டை தொடரும் குரலாக சாம் மாறுவாள் ”

அனஸ் சரீப், காசாவில்  இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தார். அவரது தியாகம், பலஸ்தீன மக்களின் உரிமைக்கான போராட்டத்தின் சின்னமாக திகழ்கிறது.

அவரின் மரணம், காசாவில் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் பத்திரிகையாளர்களின் தியாகத்தின் சின்னமாக உலகளவில் நினைவுகூரப்படுகிறது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...