வெள்ளவத்தை பள்ளிவாசலில் 106 பேரின் ரகசிய வாக்கெடுப்பில் உலமா சபை தலைவர் நாளை தெரிவு

Date:

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் அடுத்த மூன்றாண்டுகளுக்கான தலைமை மற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கான தெரிவு நாளை சனிக்கிழமை (30) வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

உலமா சபையின் மத்திய குழு அங்கத்தவர்கள் 106 பேரும் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் 30 பேர் கொண்ட நிறைவேற்றுக் குழுவைத் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.

தெரிவாகும் 30 பேர்களில் இருந்து நிர்வாகத்துக்கான 11 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

மூன்று வருட கால ஆயுளைக் கொண்ட சபையில் தலைவர் 3 தடவை மட்டுமே பதவியில் இருக்கும் விதமாக உலமா சபையின் யாப்பு திருத்தப்பட்டுள்ள நிலையிலேயே இம்முறைய தெரிவு நடைபெறுகின்றது.

64 வயதான அஷ்ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி கடந்த 21 வருடங்களாக அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் தலைவராக இருந்து வருகிறார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...