கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் மதீனாவிலுள்ள அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்திற்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று எட்டப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது, மதீனா அல் மகாரியுல் குர்ஆனிய்யா சங்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் கலாநிதி அப்துல்லாஹ் பின் முஹம்மது பின் சுலைமான் அல்ஜார்-அல்லாஹ் அவர்கள், இலங்கையில் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா திட்டத்தை ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா தமது மேற்பார்வையில் நிறுவி, செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், குர்ஆனுக்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்யும் ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ராவின் அர்ப்பணிப்பு மற்றும் தீவிர ஈடுபாட்டை அவர் பாராட்டினார்.