ஸஹீஹுல் புகாரி ‘கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அக்குரணை தாருல் உலூம் அல்மீஸானிய்யா அரபுக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
மொழிபெயர்ப்பு மற்றும் ஆய்வுகளுக்கான அல்இத்கான் நிறுவனம் ஏற்பாட்டில்
அல்ஹாஜ் இஹ்திஷாம் மீஸான் தலைமையில் நடைபெறவுள்ள இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு பிரதம அதிதியாக கலாநிதி அஷ்ஷெய்க் ரிஷாத் முஹம்மத் ஸலீம் கலந்துகொள்ளவுள்ளதுடன் நூல் விமர்சனத்தை அஷ்ஷெய்க் டாக்டர் ரயீஸுத்தீன் ஷரயீ நிகழ்த்தவுள்ளார்.
ஸஹீஹுல் புகாரி மீது தொடுக்கப்பட்டுள்ள பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்களுக்கு ‘ஸஹீஹுல் புகாரி கிரந்தத்திற்கு எதிரான நவீன குற்றச்சாட்டுக்களும் பதில்களும்’ எனும் இந்நூல் தெளிவான பதில்களை அளிக்கிறது.