பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

Date:

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம் சேவையின் முதுபெரும் கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப், (03) ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானாா்.

நாடகத் துறையில் தனக்கென தனியான பெயரைப் பெற்றிருந்தவர். மேடை நாடகம், வானொலி நாடகம், சினிமா, சின்னத்திரை என இவரது கலைப்பயணம் நீண்டிருந்தது.

இஸ்லாமிய கீதங்கள் பலவற்றையும் இவர் பாடியுள்ளார்.“லியாஉல் – ஃபன்னான்” கலைச்சுடர் எம்.எம்.ஏ லத்தீப் “புதுக்கடை லத்தீப்” என கலை உலகில் பவனி வந்தவர்.
1945 இல் கொழும்பு, புதுக்கடையில் பிறந்தவர். அரசு விருதுகள் மற்றும் பல விருதுகளையும் பெற்றவர்.

முஸ்லிம் சேவையில் பல நாடகங்களில் தனது குரலால் மக்கள் மனதையும் வென்றவர்.

அன்னாரது ஜனாஸா, (04) திங்கட்கிழமை ளுஹர் தொழுகையைத் தொடர்ந்து 12:30 மணியளவில், கொழும்பு – மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Popular

More like this
Related

சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான...

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20)...

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...