பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

Date:

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பொரல்லை கனத்தை சுற்றுவட்டத்திலிருந்து ஆரம்பித்து கெம்பல் பார்க் வாகன தரிப்பிடம் வரை
வரை மாபெரும்  பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைபெறவுள்ளது.

பலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், நாட்டின் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த அரசியல் மற்றும் சிவில் சமூகக் குழுக்களால் இந்த பேரணி கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணி, பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு , பாகிஸ்தான், இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய ஆறு ஆசிய நாடுகளில் ஒரே நேரத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த பிராந்திய இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.

இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியாவால் ஆதரிக்கப்படும் இந்த முயற்சி, மலேசியா தலைமையிலான உலகளாவிய ஒற்றுமை பிரச்சாரத்திற்கான உத்வேகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மலேசியாவின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிமின் ஆதரவின் கீழ், காசா மீதான முற்றுகையை முறியடிக்க செப்டம்பர் தொடக்கத்தில் மத்தியதரைக் கடல் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட கப்பல்களை அனுப்புவதில் 45க்கும் மேற்பட்ட நாடுகளை ஒன்றிணைக்கவுள்ளது.

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...