*பொறுப்பான அரசாங்கமாக எதிர்காலத்தில் காணாமல் போதல் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்: பிரதி அமைச்சர் முனீர்*

Date:

ஒரு பொறுப்பான அரசாங்கமாக எதிர்காலத்தில் காணாமல் போதல் போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் மிகவும் சோகமான மற்றும் வேதனையான அத்தியாயத்தை நினைவுபடுத்தும் சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு  காணாமல் போனோர் அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட  நிகழ்வு, நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர்  ஹர்ஷன நாணயக்காரவின் தலைமையில் இன்று (29) காலை அலரி மாளிகையில் நடைபெற்றது.

கடந்த காலங்களில், நாடு எதிர்கொண்ட போர் சூழ்நிலை காரணமாக, அரசியல் துன்புறுத்தல் தொடர்பான சம்பவங்கள் அதிக அளவில் இருந்ததாகக் கூறினார்.

பொறுப்புணர்வு கொண்ட ஒரு அரசாங்கம் என்ற வகையில், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க தேவையான பணிகளை தனது அரசாங்கம் வெற்றிகரமாக மேற்கொள்ளும் என்று திட்டமிடல் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 2000 ஆம் ஆண்டிற்கு முன்னர் பதிவான 10,000-க்கும் மேற்பட்ட காணாமல் போனோர் முறைப்பாடுகள் குறித்து மீண்டும் விசாரணைகள் தொடங்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே கிடைத்துள்ளதோடு, ரூ. 375 மில்லியன் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடு அலுவலகத்திற்கு புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் ஹர்ஷன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கட்டாய மாயமாதல் என்பது குற்றம் என்றும், உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவை அரசு கொள்கையின் மையமாக இருக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்கம் ஆணைக்குழு (Truth and Reconciliation Commission) நிறுவப்படும் என்றும், நியாயமான நீதி வழங்கும் புதிய சட்டக் கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும், மாயமானோரின் குடும்பங்களுக்கு ஆதரவாக முழுமையான இழப்பீட்டு அமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...