நளின், மஹிந்தானந்தவின் பிணை மனு ஒத்திவைப்பு

Date:

கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் நளின் பெனாண்டோ ஆகியோர், தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, எதிர்வரும் செப்டெம்பர் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று (25) உத்தரவை பிறப்பித்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​இலங்கை விளையாட்டு சம்மேளனம் மூலம் சதொச ஊடாக 14,000 கரம் பலகைகள், 11,000 டாம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ. 53 மில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.

குறித்த இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து, முன்னாள் வர்த்தக அமைச்சர் நளின் பெனாண்டோவுக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இது தொடர்பாக முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நலின் பெர்னாண்டோ ஆகியோர் தங்கள் சிறைத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதால், இறுதி முடிவு வரும் வரை தங்களை பிணையில் விடுவிக்கக் கோரி இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சிறந்த நாட்டை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிக்கு உழைக்கும் மக்களுக்கு அழைப்பு:: ஜனாதிபதியின் மே தின வாழ்த்து!

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை...

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...