கஹட்டோவிட்டவில் முப்பெரும் நிகழ்வுகள்!

Date:

கம்பஹா மாவட்டத்தில் 9A மதிப்பெண்களை பெற்றோர், புதிய அரசியல் பிரதிநிதிகள் கௌரவம், மீலாதுன் நபி விழா உள்ளிட்ட முப்பெரும் நிகழ்வுகள் வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் கல்வி வட்டம் (ஹாஜா ஸுபைதா எம்.ஏ. கரீம் ஞாபகார்த்த மண்டபம்) வளாகத்தில் நடைபெற உள்ளது.

இலங்கை வக்புசபை அங்கத்தவர் மெளலவி அல்ஹாஜ் எம்.என்.எம். இஜ்லான் (காஸிமி) தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், அல்லலமுல்ல பஸ்யால ஸபீலுற்றஷாத் அரபுக்கல்லூரி அதிபர் மௌலவி எம்.ஐ.எம். சுஐப் (தீனி பின்னூரி) சிறப்புரையாற்றவுள்ளார்.

ஓய்வுபெற்ற தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம். முஹம்மத் பாராட்டுரையையும், பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் எம். இக்ராம் அஹ்மத் பாரி (பி.ஏ. சிறப்பு) விஷேட உரையையும் நிகழ்த்தவுள்ளனர்.

Popular

More like this
Related

ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல...

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...