சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் விசேட நிகழ்வுகள்!

Date:

எதிர்வரும் சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் புதிதாக பிறந்த ஹிப்போ குட்டிக்கு பெயரிடும் நிகழ்வு மற்றும் பிற நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், பெயர்களை தெரிவு செய்வதன் மூலம் அதற்கான பரிசுகளை  பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மிருகக்காட்சி சாலையின் பணிப்பாளர் டாக்டர் சந்தன ராஜபக்ச கருத்து தெரிவிக்கையில்,

சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிகா படபெந்தியின் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வுகளுக்கு நிதியுதவி செய்ய பல ஊடக அமைப்புகளும் நிறுவனங்களும் முன்வந்துள்ளன.

கிப்போன் இன குரங்கினங்கள் மற்றும் வரிவால் லெமூர் எனப்படும் மிருகங்களுடன் கூடிய புதிதாக கட்டப்பட்ட ‘குரங்கு தீவின்’ பிரமாண்ட திறப்பு விழாவும் அன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

குரங்கு தீவுக்கு அருகில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மற்றொரு குரங்கு மண்டலமும் புதிதாக காட்சிப்படுத்தப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.

தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து இந்த நாளை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பிற நிகழ்வுகளில் ஓவியப் போட்டிகள், வினா விடைகள் போன்ற பல நிகழ்ச்சிகள் அடங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கண்டியில் கோலாகலமாக நடைபெற்ற ‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’ வரலாற்று நூலின் அறிமுக விழா!

இலங்கையின் பெருமைமிக்க வரலாற்றில் முஸ்லிம்களின் பங்களிப்பை எடுத்துரைக்கும் 'அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய...

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...