தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டிற்கான பாடசாலை நாட்காட்டி

Date:

இலங்கையின் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை உள்ளடக்கிய வகையில் 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நாட்காட்டியை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவின் கையொப்பத்துடன் இந்த பாடசாலை நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நாட்காட்டி அட்டவணை தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கான தவணை திகதிகளையும் குறிப்பிடுகின்றது.

அதற்கமைய புத்தாண்டின் முதலாம் தவணையின் முதல் கட்டம் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு 2026 ஜனவரி 1ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

பெப்ரவரி 14ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டு முதலாம் தவணையின் இரண்டாம் கட்டத்திற்காக தமிழ், சிங்கள பாடசாலைகள் மார்ச் 3ஆம் திகதி ஆரம்பமாவதுடன் முஸ்லிம் பாடசாலைகள் மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகும்.

தமிழ், சிங்கள பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 10 ஆம் திகதி நிறைவடைந்து பின்னர் விடுமுறை வழங்கப்படும்.

தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் 20 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை மாதம் 24 ஆம் திகதி வரை நடைபெறும்.

குறித்த பாடசாலைகளின் மூன்றாம் தவணை ஜூலை மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் மாதம் 04ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பஸ்களை அலங்கரிக்க அனுமதிக்கும் சுற்றுநிரூபம் இரத்து!

பஸ்களை அலங்கரிப்பதற்கும். மேலதிக பாகங்களை பொருத்துவதற்கும் சட்ட அனுமதிகளை வழங்கி வெளியிடப்பட்ட...

காசா யுத்தமும் அரபு நாடுகளும்: 2025 இறுதி முதல் 2030 வரை கடும் இராணுவ போராட்டங்கள் காத்திருக்கின்றன’

-எம்.என் முஹம்மத் நெதன்யாகு மிகத் தெளிவாக பலஸ்தீன் என்ற ஒரு நாடு இல்லை...

இஸ்ரேலையும் பலஸ்தீனத்தையும் தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் ஐ.நா. தீர்மானம் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு!

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்துக்கு இடையிலான இரு நாடுகள் தீர்வுக்கு ஐக்கிய நாடுகள்...

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் வெடித்ததிலிருந்து அவுஸ்திரேலியாவில் இஸ்லாமிய வெறுப்பு ‘ கடுமையாக உயர்ந்துள்ளது:

நாட்டில் இஸ்லாம் மீதான பாரபட்சம் பரவலாக இருப்பதாகவும், சமூக ஒற்றுமையை அரித்து...