செப் 07 இல் இலங்கை வானில் தெரியும் குருதி நிலவு..!

Date:

இந்த ஞாயிற்றுக்கிழமை போயா தினத்தன்று (செப்டம்பர் 7) இரவு வானத்தில் பூரண சந்திர கிரகணம் நிகழவுள்ளது. சந்திரனை கடும் சிவப்பு நிறமாக மாற்றும் ஒரு அற்புதமான ‘குருதி நிலவை’ காணும் அரிய வாய்ப்பு இலங்கையர்களுக்கு கிடைக்கவிருக்கிறது.

கொழும்பு பல்கலைக்கழக இயற்பியல் துறைத் தலைவரும் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் பிரிவு பணிப்பாளருமான பேராசிரியர் சந்தன ஜெயரத்ன கூறுகையில், இது இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணம் ஆகும், இது உலக சனத் தொகையில் கிட்டத்தட்ட 85% பேருக்குத் தெரியும். இந்த நிகழ்வின் தெளிவான காட்சிகளை இலங்கையில் அவதானிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.

கிரகணம் இரவு 8.58 மணிக்கு ஆரம்பமாகும். அதைத் தொடர்ந்து இரவு 9.57 மணிக்கு பகுதியளவான கிரகணம் ஏற்படும். முழு கிரகணம் இரவு 11.01 மணிக்கு தொடங்கி இரவு 11.42 மணிக்கு உச்சத்தை அடையும், செப்டம்பர் 8 ஆம் தேதி காலை 12.22 மணி வரை இது நீடிக்கும். பகுதியளவான தேயும் கட்டம் அதிகாலை 1.26 மணிக்கு முடிவடையும். முழு நிகழ்வு 5 மணி நேரம் 27 நிமிடங்கள் நீடிக்கும்.

சூரியனுக்கும் பூரண சந்திரனுக்கும் இடையில் பூமி கடந்து செல்லும் போது, ​​அதன் நிழல் விழுந்து, சந்திரனின் வெண்மையான ஒளியை சிவப்பு நிறமாக மாற்றுவதனால் குருதி நிலவு ஏற்படுகிறது என பேராசிரியர் ஜெயரத்ன தெரிவித்தார்.

வானிலை சீராக இருந்தால் ஆசியா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியில் இந்தக் கிரகணம் தெரிய வாய்ப்புள்ளது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் ஜனவரியில்..!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாது எஞ்சியுள்ள பாடங்களுக்கான பரீட்சைகளை...

அனர்த்தத்தால் சேதமடைந்த வாகனங்களின் உரிமையாளர்களுக்கு உதவி: வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்.

நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தத்தால் அழிவடைந்த மற்றும் சேதமடைந்த வாகனங்கள்...

பாகிஸ்தான் கடல்சார் விவகாரங்களுக்கான அமைச்சர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம்

பாகிஸ்தான் கடற்றொழில் மற்றும் (பெட்ரல் ) உள்ஆட்சி அமைச்சர் மொஹமட் ஜுனைத்...

பலத்த மின்னல் தாக்கம்: வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சள் எச்சரிக்கை.

மேற்கு, சபரகமுவ, தெற்கு மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் கடுமையான மின்னலுக்கான செம்மஞ்சள்...