முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலங்கம பொலிசாரினால் இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இராணுவ வீரர் நினைவு தின நிகழ்விற்கான ஒத்திகை செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு இன்றைய தினம் சென்றிருந்த நிலையிலேயே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
